கோலாலம்பூர், மார்ச் 22-
வழக்கமான பயண நேரத்தையும் பயணங்களையும் கே டி எம் குறைத்துக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நடவடிக்கை மார்ச் 31 வரை நடப்பில் இருக்கும் என்று தலைமை அதிகாரி கமாருல்ஸமான் தெரிவித்திருக்கிறார்.

பொதுமக்கள் நடமாட்டம் கட்டுபடுத்தப்பட்டிருக்கும் இவ்வேளையில் கூடுதல் போக்குவரத்தால் எந்தப்பயனும் இல்லை.
ஒரு நாளைக்கு 40 ஆக இருந்த இ.டி.எஸ். சேவை 8 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
நகர்ப்புற ரயில்பயணங்கள் 18 லிருந்து 10 ஆகவும், கொமியூட்டர் 204 லிருந்து 167 ஆகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.
தேவைகேற்ப பயண நேரங்கள் மீள்பார்வை செய்யப்படும் என்றும் கமாருல்ஸமான் தெரிவித்தார்.