கோலாலம்பூர். மார்ச் 25-
தம்மைத் தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் துன் டாக்டர் மகாதீர் முக்மது அடுத்தகட்ட அரசியல் நகர்வுபற்றி ஷா ஆலம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட் தெரிவித்திருக்கிறார்.
ஏமாற்றத்தின் இறுக்கம் அவரிடம் தெரிகிறது .நான் அமைத்த கட்சி எனக்கு வேண்டும். அதை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று அவர் கூறியதை தெரிவித்தார்.
மலேசிய அரசியல் சுத்திரதாரியாக இருந்த அவர் எமாற்றபட்டிருக்கும் சங்கடத்தில் இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும் 95 வயதிலும் அந்த எமாற்றம் மறைக்க முடியாததாய் உணரமுடிக்கிறது.
அவர்தம் கம்பீரம் இன்னும் குலையவில்லை. மிடுக்கு இன்னும் மாறவில்லை.
விடைபெற முயன்றபோது கைகுலுக்கிக் கொள்ள அவர் தயாரில்லை என்பதை இந்திய வணக்கம் உணர்த்தியது. காலிட் சமாட் அதைப்புரிந்துகொண்டார்.