ஜெனிவா –
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 196 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த வைரசுக்கு தினமும் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 41 ஆயிரத்து 371 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிப்பு 3 லட்சத்து 81 ஆயிரத்து 439 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 1,873 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பலியானோரின் எண்ணிக்கை சதவீதம் 13 ஆக தொடர்ந்து வருகிறது. 1,628 பேர் பலியாகி இருந்தனர்.
தற்போது கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இத்தாலியில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது. அங்கு ஒரே நாளில் 601 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 77 ஆக உயர்ந்தது. மேலும் 4 ஆயிரத்து 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 927 ஆக உள்ளது.
சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 மடங்குக்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 18 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.