மாட்ரிட் –
கொரோனா வைரசுக்கு ஒவ்வொரு நாட்டிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதலில் கண்டறியப்பட்ட சீனாவில்தான் பலியானோர் எண்ணிக்கை மூன்று ஆயிரத்தை தாண்டியது.
அதன்பின் இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்ல சீனா உயிரிழப்பை கட்டுப்படுத்தியது. இதனால் சீனாவை விட இரண்டு மடங்கு இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது ஸ்பெய்னில் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் அதிகமானோரை பலிகொண்ட நாடுகள் பட்டியலில் தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி ஸ்பெய்ன் 2ஆவது இடத்திற்கு முந்தியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி இத்தாலியில் 6,820 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெய்னில் 3,443 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 3,160 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கு அடுத்தப்படியாக ஈரானில் 1,934 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் 1,100 பேர் உயிரிழந்துள்ளனர்.