ஜியார்ஜ்டவுன், மார்ச் 29-
போலிசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக ஓர் ஆடவர் கடலில் குதித்திருக்கிறார்.
நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இங்குள்ள ஜெலுத்தோங் மீன் துறையில் 20 வயது ஆடவரை கைதுசெய்ய முற்பட்டபோது அந்நபர் கடலில் குதித்து 50 மீட்டர் தூரம் நீந்தினார்.
சரணடைய மறுத்த அவரின் பாதுகாப்பு கருதி போலீசார் தங்கள் நடவடிக்கையை நிறுத்திக்கொண்டனர்.
இதனிடையே போலீசாரின் நடவடிக்கையில் 21 வயது முதல் 70 வயதிலான அவர்தம் நண்பர்கள் 13 பேர் வடகிழக்கு மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.