வேகமாக பரவுகிறது கொரோனா உலக சுகாதார அமைப்பு கவலை

கொரோனோ வைரஸ் பாதிப்பால் கடந்த ஒரு வாரத்தில் இறப்பு விகிதம் இரு மடங்காகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவா, ஏப்ரல் 2-

 

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் , தற்போது உலகம் முழுவதையும் விழிபிதுங்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார்  190 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும்  935,840-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  47,241 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 194,286  மீண்டுள்ளனர்

 

இதற்கிடையில் கொரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் கடந்த ஒரே வாரத்தில் இரட்டிப்பானது பெரும் கவலை தருவதாக சர்வதேச சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதோனம் கெப்ரிசிஸ், கொரோனா ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதுஅடுத்த ஒருவாரத்தில் உலகளவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு 10 லட்சத்தை தொடும். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயரும்என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here