யு-டியூப்பில் புனித வெள்ளி பிரார்த்தனை

கோவிட்-19 தாக்கத்தினால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தேவாலயங்களில் பிரார்த்தனைகள் எதுவும் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக யு-டியூப் மூலம் இன்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்கள்.

கிறிஸ்தவர்களின் தவக் காலம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இன்று புனித வெள்ளி தினம். ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட இந்த தினத்தில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று நாள் முழுக்க பிரார்த் தனைகளில் ஈடுபடுவார்கள்.

ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தேவாலயங்களில் பிரார்த்தனைகள் எதுவும் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக யு-டியூப் மூலம் இன்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்கள்.

அந்தந்த தேவாலயங்களில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ்-அப்பில் குழு அமைத்துள்ளார்கள். அந்த குழுவில் புனித வெள்ளி பிரார்த்தனை யு-டியூப் சானல் எந்த முகவரியில் உள்ளது என்பதை பகிர்ந்துள்ளனர். அதன்படி அவரவர் வீடுகளில் இருந்தே யு-டியூப் சானலில் இன்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

முக்கியமாக பிரார்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் எவ்வாறு தேவாலயங்களுக்கு தயாராகி செல்வார்களோ அதே உணர்வோடு வீடுகளிலும் அமர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என்று போதகர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதன்படி அனைவரும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். ஆன்டிராய்டு வசதியுடன் கூடிய டி.வி. வைத்திருப்பவர்கள் டி.வி.யிலேயே ஒளிபரப்ப வைத்து அனைவரும் டி.வி. முன்பு அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அந்த வசதி இல்லாதவர்கள் செல்போனில் யு-டியூப்பை பார்த்து பிரார்த்தனை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here