ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… அதிரும் உலக நாடுகள்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஜெனிவா, ஏப்ரல் 15-

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 19 லட்சத்து 90 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 13 லட்சத்து 97 ஆயித்து 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 4 லட்சத்து 66 ஆயிரத்து 997 பேர் சிகிச்ச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 919 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-

அமெரிக்கா – 25,839
ஸ்பெயின் – 18,056
இத்தாலி – 21,067
பிரான்ஸ் – 15,729
ஜெர்மனி – 3,294
இங்கிலாந்து – 12,107
சீனா – 3,341
ஈரான் – 4,683
துருக்கி – 1,403
பெல்ஜியம் – 4,175
நெதர்லாந்து – 2,945
சுவிஸ்சர்லாந்து – 1,174
பிரேசில் – 1,489
ஸ்வீடன் – 1,033

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here