ரமலான் முழுவதும் சூராவ்களில் தாராவிஹ் தொழுகை இல்லை!

கோலாலம்பூர்:
நாட்டில் முஸ்லிம்களுக்கான நோன்பின் தொடக்கத்தை தீர்மானிக்க அமாவாசை பார்க்கும் தேதி நாளை (ஏப்ரல் 23) நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது 29 சியாபான் 1441 ஹிஜ்ராவும் ஆகும்.

ரமலான் பஜார்களை மாற்றியமைக்கும் இ-பஜார் கருத்து உட்பட புதிய இயல்பைப் பயிற்சி செய்யும் போது இந்த ஆண்டு ரமலான் அனுசரிக்கப்படும், மேலும் மக்கல் நடமாட்ட கட்டுப்பாட்டு காலம் நீட்டிக்கப்படாவிட்டாலும், இந்த ஆண்டு நிலைமை நிச்சயமாக மாறுபட்டதாகவே இருக்கும்.

கூடுதலாக, ரமலான் முழுவதும் சூராவ் அல்லது மசூதிகளில் தாராவிஹ் தொழுகை இருக்காது, ஏனெனில் இது கோவிட் -19 தொற்றின் தொடர்பை உடைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா செய்தியாளர் கூட்டத்தில் இதுபற்றிக் கூறியிருக்கிறார். நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றைக் குறைக்க அரசாங்கத்திற்கு உதவுவதில் சமூக இணக்கம் முக்கியமானது என்கிறார் அவர்.

நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றுகள் குறைந்துவரும் வேளையில், மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டிற்கு இணங்குவதை நிறுத்த முடியும் என்று அர்த்தமாகாது.
அனைத்து உத்தரவுகளுக்கும் இணக்கமாக இருப்பது அனைவரின் பொறுப்பாகும் என்றும் எச்சரித்தார் மூத்த அமைச்சர் சப்ரி யாக்கோப்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒவ்வோர் அறிவுறுத்தலுக்கும் இணங்குவதில் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டி ஆணையை ஏப்ரல் 28 க்கு அப்பால் நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை அடுத்த அறிவிப்புகள் வரை காத்திருக்கவேண்டும் அதன்படி. உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும், மேலும் சிங்கப்பூரிலிருந்தும் பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். எனவே, கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதில் அனைத்து தரப்பினரும் பங்கு வகிப்பது முக்கியம் என்றார் அவர்.

கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும், உலக அங்கீகாரத்தைக் கொண்டுவருவதிலும் அயராது முயன்றதற்காக மலேசிய முன்னணிப் பணியாளர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார் பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here