ஒரே நாளில் சுமார் 650 பேர் – இங்கிலாந்தை புரட்டி எடுக்கும் கொரோனா

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்

லண்டன்,ஏப்ரல் 24-

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 27 லட்சத்து 5 ஆயிரத்து 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 17 லட்சத்து 73 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 675 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

மேலும், வைரஸ் பரவியவர்களில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 206 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 486 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்சுக்கு அடுத்தபடியாக கொரோனா தற்போது இங்கிலாந்தில் நிலை கொண்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து நாட்டில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 78 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 4 ஆயிரத்து 583 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 638 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 738 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here