ஜெனீவா,ஏப்ரல் 24-
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 27 லட்சத்து 5 ஆயிரத்து 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 17 லட்சத்து 73 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 675 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பரவியவர்களில் இதுவரை 7 லட்சத்து 42 ஆயிரத்து 206 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 486 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-
அமெரிக்கா – 8,74,053
ஸ்பெயின் – 2,13,024
இத்தாலி – 1,89,973
பிரான்ஸ் – 1,58,183
இங்கிலாந்து – 1,38,078
துருக்கி – 1,01,790
ஈரான் – 87,026
சீனா – 82,798
ரஷியா – 62,773
பிரேசில் – 46,701
பெல்ஜியம் – 42,797
கனடா – 41,791
நெதர்லாந்து – 35,729