மேலும் 4 வாரங்களுக்கு எம்சிஓ நீட்டிப்பு – அறிவித்தார் பிரதமர்

பெட்டாலிங் ஜெயா: மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (எம்.சி.ஓ) ஜூன் 9 வரை மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (மே 10) ஒரு நேரடி ஒளிபரப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். எம்.சி.ஓவை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பது இது ஐந்தாவது முறையாகும். நாட்டில் கோவிட் -19 சம்பவங்கள் அதிகரித்த பின்னர் இரண்டு வார காலத்திற்கு MCO முதன்முதலில் மார்ச் 18 அன்று அமல்படுத்தப்பட்டது.

பின்னர் அது கட்டம் கட்ட்டமாக நீட்டிக்கப்பட்டது, ஒவ்வொரு கட்டமும் இரண்டு வாரங்கள் நீடிக்கும். நாடு இப்போது MCO இன் நான்காவது கட்டத்தில் உள்ளது, இது மே 12 வரை இருக்கும். இருப்பினும், மே 4 அன்று, அரசாங்கம் நிபந்தனைக்குட்பட்ட MCO ஐ விதித்தது, இது கிட்டத்தட்ட அனைத்து பொருளாதாரத் துறைகளையும் மீண்டும் திறக்க அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here