விலாயா மாநில இந்து சங்கத்தின் மனிதாபிமான உதவி

கோலாலம்பூர்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவினால் மலேசியாவில் கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டினை  (எம்சிஓ) அமல்படுத்தியிருக்கிறது. இந்த எம்சிஓ காலகட்டத்தில் வேலைக்கு செல்ல முடியாதவர்கள் மற்றும் வசதி குறைந்தவர்களுக்கான உதவிகளை பலர் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் சமய வளர்ச்சிக்காக  சேவையாற்றி வரும் மலேசிய இந்து சங்கம் பல உதவிகளை வழங்கி வருகிறது. அதே வேளை அந்தந்த இந்து சங்க மாநிலப் பேரவைகளும் உதவிகளை வழங்கி வருகிறது. விலாயா மாநிலத்தின் கீழ் இயங்கி வரும் 6 வட்டாரப் பேரவைகளும் கடந்த  56 நாட்களில் அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கோருக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

பிரதமர் நேற்று (மே 10) எம்சிஓ ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து விலாயா மாநிலத்தின் வழி மேலும் உதவிகளை எவ்வாறு வழங்குவது குறித்து வட்டாரத் தலைவர்களுடன் மாநிலத் தலைவர் மாணிக்கவாசகம் கதிரேசன் மாநில அலுவலகத்தில் சந்திப்பு கூட்டத்தை இன்று நடத்தினார்.

நீட்டிக்கப்பட்டிருக்கும் எம்சிஓ காலகட்டத்தில் உதவி தேவைப்படுவோருக்கு எவ்வாறு உதவிகளை வழங்குவது குறித்தும் அதே வேளை இதுவரை எத்தனை பேருக்கு எவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது குறித்து பேசப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here