கோவிட் 19 தொற்று நோய்க்கு இன்று 78 பேர் இலக்காகியுள்ள வேளையில் ஒருவர் மரணனமடைந்துள்ளார். இன்று மட்டும் 63 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
மொத்த மரண எண்ணிக்கை 115ஆக இருக்கும் வேளையில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7,137 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,859 ஆக இருக்கும் வேளையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,163 ஆக பதிவாகி இருக்கிறது.