வேலையிழந்துவிடும் நிலையில் இருக்கும் மலேசியத் தொழிலாளர்கள் இன்னும் ஆறுமாதங்களாவது தாக்குப்பிடிக்க வேண்டுமென்பதுபோல் சூழல் அமைந்திருக்கிறது,
தொற்றின் பாதிப்பு ஏற்ற இறக்கமாய் இருப்பதால் இந்த நிலை உருவாகக்கூடும் என்று தொழில், பொருளாதார வல்லுர்கள் கூறுகின்றனர்.
தொழில் பாதிப்பினால் வேலையில்லா நிலைக்கு மலேசியத் தொழிலாளர்கள் தள்ளப்படும் சாத்தியம் அதிகமிருக்கிறது. இதற்கான ஏற்பாட்டில் தயார் நிலையில் மக்கள் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.
பொருளாதாரப் பாதிப்பு ஒருபக்கம் . பொருட்களின் விலையேற்றம் என்பதெல்லாம் மக்களை அச்சுறுத்தக் காத்திருக்கின்றன. மக்கள் கவனமாக இருக்கத் தயாராகவே இருக்க வேண்டும்.