கோவிட் 19 நடைமுறையைப் பின்பற்றாத பேருந்து நிறுவனங்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் ஓடும் பேருந்துகளில் பயணிக்கும் அன்னியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. கோவிட் 19 காலத்திய நடைமுறைகளும் வெகுவாக மீறப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

இருவர் அமரக்கூடிய இருக்கைகளுள் ஓர் இருக்கை மீது பெருக்கல் குறியீடு இடப்பட்டுள்ளது. பெருக்கல் குறியீட்டு இருக்கையில் அமர பயணிகளுக்கு இதுநாள் வரையில் அனுமதி இல்லை.

சமுக இடைவெளியை அவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெருக்கல் குறியிட்ட இருக்கைகள் அனைத்தும்  காலியாகவே இருக்கும்…. இருக்க வேண்டும்.

ஆனால் கடந்த சில நாட்களாக பயணிகள், பெருக்கல் குறியீட்டு இருக்கைகளிலும் அமர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் அவ்வாறு அமர்வதை ஓட்டுநர் கண்டித்து மறு நடவடிக்கைக்கு உட்படுத்துவதில்லை.

குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் ஓடுவதால் மக்கள் கூட்டம் பெருகி வரும் இந்த நிலையில் மேலும் அதிகமான பேருந்துகளை இயக்குவதை விடுத்து ஒரே பேருந்தில் ஆட்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வருவது ஆபத்தை விளைவிக்கலாம்.

இந்நிலை தொடருமாயின் மலேசிய பேருந்து குழுமத்திற்கான கோவிட் 19 தொற்றுகளை மலேசியா சமாளிக்க வேண்டிய அபாய கட்டம் ஏற்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here