முன்னாள் மேனேஜர் தற்கொலை – அதிர்ச்சியில் ஐஸ்வர்யாராய்

மும்பை மலாட் என்ற பகுதியில் திஷா ஷாலியன் என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் நேற்று மாலை திடீரென 14வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திஷா ஷாலியன் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை குறித்த கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட திஷா ஷாலியன், நடிகை ஐஸ்வர்யா ராய், வருண் ஷர்மா, சுஷாத் போன்ற பாலிவுட் பிரபலங்களுக்கு மேனேஜராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு ஐஸ்வர்யாராய் உள்பட பாலிவுட் பிரபலங்கள் தங்களது அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here