கெஅடிலான் கட்சியில் இணைகிறேன் – ஏஸாம் அறிவிப்பு

கடந்த 1999ஆம் ஆண்டில் கெஅடிலான் கட்சி தோற்றுவிக்கப்பட்போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து போராடிய டத்தோ முகமட் ஏஸாம் முகமட் நோர் மீண்டும் கெஅடிலான் கட்சியில் இணைகிறார்.

கெஅடிலானில் சேரும் விண்ணப்பப் பாரத்தை கட்சித் தலைமைத்துவத்திற்கு அனுப்பிவிட்டதாக அவர் தெரிவித்தார். கெஅடிலான் கட்சியின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினரான அவர், நோன்புப் பெருநாள் காலத்தில் இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததாகக் கூறினார். இது டத்தோஸ்ரீ அன்வாருக்கும் தெரிந்திருக்கும்.

என்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதைப் பற்றி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார்.

டத்தோஸ்ரீ அன்வாருடன் இணைந்து 1999இல் கெஅடிலான் மறுமலர்ச்சியை தோற்றுவித்தோம். இப்போது மீண்டும் போராட்டம் அவருடன் தொடங்குகிறது என்றார் அவர். சிலாங்கூர் மாநிலத்தில் கெஅடிலான் கட்சி மீண்டும் வலுப்பெறப் போராடுவேன் என்று தெரிவித்த அவர், தனது அபிமான நண்பர்கள் அழைப்பை ஏற்று மீண்டும் கட்சிக்குத் திரும்புவதாகக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here