சாலையின் எதிர்புறம் சென்ற லோரி – அதிர்ச்சிக்குள்ளான வாகனமோட்டிகள்

பெட்டாலிங் ஜெயா: கிள்ளானில் போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராக தனது லோரியை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை விசாரித்து வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) பிற்பகல் 3.45 மணியளவில் வெஸ்ட்போர்ட்டிலிருந்து புலாவ் இண்டா நோக்கிச் செல்லும் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக  கிள்ளான் தென்மாவட்ட போலீஸ் தலைவர்  ஷம்சுல் அமர் ராம்லி தெரிவித்தார். போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு குழு ஓட்டுநரைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தது என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக 46 வயதான லோரி டிரைவர் மீது போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்துக்கு எதிராக லோரி ஓட்டுவதைப் பார்த்த ஒரு டிரைவர் திடீரென நிறுத்துவதைக் காட்டும் 12 விநாடி வீடியோவில் இச்சம்பவம் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here