ஷா ஆலம்,
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் தலைமையில் இயங்கும் மை செல் மூலம் மேலும் எட்டு பேருக்கு குடியுரிமை மற்றும் பிறப்புப் பத்திரம் பெற்றுத் தரப்பட்டது.
ஆவணங்கள் இல்லாத மலேசியர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட மை செல் மூலம் 1,660
புகார்கள் கிடைக்கப் பெற்றன.
இதில் 324 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு ஆவணங்கள் பெற்றுத் தந்துள்ளோம். இப்போது மேலும் எட்டு பேருக்கு ஆவணங்கள் பெற்றுத் தந்துள்ளோம் என்று கணபதி ராவ் தெரிவித்தார்.
மை செல் அதிகாரிகள் திருமதி சாந்தா மற்றும் ரகுபதி இராமன் அடிக்கடி புத்ராஜெயாவுக்குச் சென்று ஆவணங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண பாடுபட்டு வருகிறார்கள் என்றார் அவர்.