ஜார்ஜ் டவுன்:
பினாங்கில் தண்ணீர்க் கட்டணம் உயர்ந்து வருவது குறித்து சமீப நாட்களில் 50க்கும் மேற்பட்ட புகார்களை தாம் பெற்றதாக கெராக்கான் பொதுப் புகார்கள் பணியகத் தலைவர் ஆண்ட்ரூ ஓய் கூறினார்.
குடிநீர்க் கட்டண உயர்வுக்குப் பிறகும் பழைய நீர் நுகர்வு மற்றும் மாத இருமுறை கணக்கீடு முறையையே பினாங்கு நீர் வழங்கல் நிறுவனம் பயன்படுத்துவதால், வீட்டுப்பாவனைக்குரிய நீர் கட்டணம் அதிகமாக உள்ளதால் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றார்.
சில புகார்தாரர்களின் கூற்றுப்படி, பல குடும்பங்களின் குடிநீர் கட்டணம் 100 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், சிலர் 150 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருப்பதாகவும் கூறுவது ஏற்றுக்கோள்ள முடியாதது என்று அவர் சொன்னார்.
இந்நிலையில் தனது சொந்தத் தண்ணீர்க் கட்டணமும் அபரிமிதமான அதிகரிப்பைக் காட்டியது, ஆனால் அவர் அது தொடர்பில் புகார் அளித்த பிறகு, தான் குறைந்த தொகையை மட்டுமே செலுத்தினார் என்று அவர் கூறினார்.