புக்கிட் ஜாலில் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு செனிடைஸர் வழங்கினார் டத்தோ பத்மநாதன்

கோவிட் 19 தாக்கத்திற்கு பிறகு தளர்த்தப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

அந்த வகையில் புக்கிட் ஜாலில் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிச் செய்யும் நடவடிக்கையாக அப்பள்ளியின் முன்னாள் மாணவர் தொழிலதிபர் டத்தோ பத்மநாதன் செனிடைஸர்களை வழங்கினார்.

பள்ளியின் பிரதான நுழைவாசல், வகுப்பறைகள், ஆசியர்கள் அறை என அனைத்து இடங்களிலும் அனைவரும் சுகாதார விழிப்புடன் இருக்க அவர் செனிடைஸர்களை வழங்கினார்.

அப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் தம்மால் இயன்ற அளவிற்கு உதவிகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

அரசாங்கம் விதித்திருக்கும் எஸ்ஓபிகளை பள்ளி தரப்பினர் உட்பட அனைவரும் முறையாக பின் பற்ற வேண்டும். மலேசியாவில் கோவிட் 19 தாக்கம் குறைந்திருந்தாலும் நாம் எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் சுய சுகாதாரத்தோடு செயல்பட வேண்டும் என்று டத்தோ பத்மநாதன் கேட்டு கொண்டார்.

248 மாணவர்கள், 17 ஆசியர்களுடன் செயல்படும் புக்கிட் ஜாலில் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மாணவர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவதாக தலைமையாசிரியர் பாக்கியலெட்சுமி தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் பள்ளி நேரம் தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு எஸ்ஓபி குறித்த விளக்கம் அளிக்கப்படும். அதோடு மாணவர்கள் இடையே கூடல் இடைவெளி மற்றும் செனிடைஸரை பயன்படுத்துவது உறுதிச் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here