ரம்லான் இப்ராஹிம் தேர்தல் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்

புத்ராஜெயா :   தேர்தல் கமிஷன் உறுப்பினர் பதவியை டத்தோஶ்ரீ  ரம்லான் இப்ராஹிம் ராஜினாமா செய்ததாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) அறிவித்தது. இன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ரம்லானின் ராஜினாமாவை யாங் டி-பெர்டுவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புக் கொண்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைய உறுப்பினராக டத்தோ செரி ராம்லான் இப்ராஹிம் அளித்த பங்களிப்புகள் மற்றும் சேவைகளுக்கு தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது என்று அது கூறியுள்ளது. முன்னாள் வெளியுறவு அமைச்சக பொதுச்செயலாளராக இருக்கும் 63 வயதான ரம்லான் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here