தற்கொலை செய்த விஜய் ரசிகரின் குடும்பத்திற்கு ஆறுதல்

இன்று காலை முதல் டுவிட்டரில் பாலா என்ற விஜய் ரசிகர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட தகவல் மிக வேகமாக பரவி டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே. குடும்ப பிரச்சனை காரணமாக மன அழுத்தத்திற்கு உண்டான பாலா, விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை பார்க்காமலேயே போகிறேனே என்றும், விஜய்யையும் பார்க்காமல் போகிறேனே என்றும் உருக்கமுடன் பதிவு செய்த டுவிட் அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தனக்கு காதல் தோல்வி எதுவும் இல்லை என்றும் குடும்ப பிரச்சனை மட்டுமே என்றும் என்னை அனைவருமே வெறுக்கின்றனர் என்றும் ஒரு மனிதன் எவ்வளவு தான் வலியை தாங்குவது என்றும் அவர் தனது கடைசி டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ரசிகர் பாலாவின் தற்கொலை அவரது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சி அடைய செய்தது போல் விஜய்யையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினரிடம் போன் மூலம் விஜய் ஆறுதல் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனே ரியாக்சன் செய்யும் விஜய், பாலாவின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here