அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

சென்னை ராமாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் நீலாங்கரை போலீசில் அளித்த புகாரில் அக்கரை பகுதியில் வசிக்கும் 52 வயதான ஜமுனாதேவி, பொதுப்பணி துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் ரூபாய் பணத்தை தம்மிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்கும் மேலான நிலையில் அரசு பணி வாங்கி தராமலும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப் ப​திவு செய்த குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெரி மேற்கொண்ட விசாரணையில் மோசடி நடந்தது உறுதியாகி உள்ளது.

இதையடுத்து ஜமுனா தேவியை போலீசார் கைது செய்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here