நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும் சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்களின் பட்டியலைக் கொண்டு வர அனைத்து மாநில அரசுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
நீர் தர நிபுணர் டாக்டர் ஜாக்கி ஜைனுடின் கூறுகையில், நீர் மேலாண்மைக்குப் பொறுப்பான மாநில அரசு இந்த பட்டியலை உருவாக்க வேண்டும், இதனால் இது மாநில கூட்டு நிறுவனங்களுக்கு ஒரு ‘மாநில உத்தரவாக இது பயன்படுத்தப்படலாம்.
புதிய (ஆபத்தான) தொழில்கள் எதுவும் அமைக்கப்படவில்லை (பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு அருகில்) என்பதை உறுதி செய்வதே பட்டியலின் முக்கிய நோக்கம்.
இரண்டாவதாக, தற்போதுள்ள தொழில்களுக்கு, அவர்கள் நிச்சயமாக விரிவாக்கத்தைக் கோருவார்கள், ஆனால், அவை பட்டியலில் விழுந்தால், அவர்கள் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ருவாங் பிகாரா நிகழ்ச்சியில் விருந்தினராக தோன்றிய போதே இவ்வாறு கூறினார் .
இதுபோன்ற தொழில்துறை பகுதிகளை கீழ்நிலை , குறைந்த ஆபத்துள்ள பகுதிகளில் அமைக்க மாநில அரசு திட்டமிட வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
முதலில், அபாயகர பகுதியை மாசு தொடர்பான சட்டத்தில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்வதே நல்லது. , இதனால் சேதங்களை எளிதில் கோர முடியும். பயனீட்டாளர்கள் வணிகத் தொழில் , பலவற்றிற்காக, சேதங்களை கோர முயற்சிக்கும்போது, அது சாதாரண சட்ட செயல்முறை மூலம் செய்யப்பட்டால், விசாரணையைத் தனித்தனியாக செய்ய வேண்டியிருக்கும். நீதிமன்றத்தில் நிரூபிப்பதும் கடினம்.
அவர்களில் ஒருவர் குற்றம் செய்திருக்கலாம், ஆனால், அந்த நபரின் பின்னால் ஒரு பெரிய சூத்திரதாரி இருக்கலாம். அதனால்தான், இராணுவம், காவல்துறையின் ஒத்துழைப்புடன் விசாரணைக்கு அரசாங்கம் ஒரு சிறப்புப் பிரிவை அமைத்துள்ளது. இது சுற்றுச்சூழல் விசாரணையை மேலும் வலுப்படுத்த உதவும், என்று அவர் கூறினார்.
மூல நீர் ஆதாரத்தை மாசுபட்டதால் சுங்கை சிலாங்கூர் ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன, கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் நீர் வழங்கல் தடைகளை எதிர்கொண்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் , நீர் வளத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மேன், மாசுபடுத்தும் பிரச்சினைக்கு தீர்வு காண தனது அமைச்சகம் எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் குற்றப்பிரிவை அமைக்கும் என்று கூறினார்.