இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதற்றத்தை தணிக்க ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளுக்கும் இடையே முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்தப் பேச்சுவார்த்தை துவங்க இருக்கிறது.
டெல்லியில் நேற்று நடந்த இதுதொடர்பான கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஸ்கோவில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எல்லையில் பதற்றத்தை தணிப்பது, ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியில் பேச்சுவாத்தை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது.