முதல் முறையாக அணுகுண்டு சோதனை செப்டம்பர் 19

அமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியில் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1870 – பிரான்சுக்கும் புருசியாவுக்கும் இடம்பெற்ற போரில் பாரிஸ் நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் 1871, ஜனவரி 28-ல் புருசியாவிடம் வீழ்ந்தது.

1881 – ஜூலை 2-ல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட் இறந்தார்.

1893 – சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.

1893 – நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு என்று பெயர் பெற்றது.

1942 – மேற்கு உக்ரைனில் புரோடி என்ற இடத்தில் கிட்டத்தட்ட 2,500 யூதர்கள் நாசி வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

1944 – பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

1952 – ஐக்கிய அமெரிக்கா சார்லி சாப்ளின் இங்கிலாந்து சென்றுவிட்டுத் அமெரிக்க திரும்புவதற்குத் தடை விதித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here