கர்நாடக மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 2,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,44,147 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 11,369 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் இதுவரை 7,99,439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.