கோலாலம்பூர்: 71 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் தனது பாங்சர் வீட்டில் கொள்ளையர்களைத் தடுக்க முயன்றபோது கொல்லப்பட்டார்.
“இறந்தவரின் மனைவியின் கூற்றுப்படி, அதிகாலை 3.30 மணியளவில் சமையலறையிலிருந்து உரத்த சத்தம் கேட்டதாகவும் சமையல் பக்கம் வழியாக முகமூடி அணிந்த இருவர் வீட்டிற்குள் நுழைந்ததாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29) தொடர்பு கொண்ட கேட்டபோது பிரிக்ஃபீல்ட்ஸ் ஓசிபிடி உதவி ஆணையர் அனுவார் ஓமர் கூறினார்.
கணவனுக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் ஒரு சண்டை ஏற்பட்டதாகவும், அதுவே அவரை வெட்டிக் கொள்ள வழிவகுத்ததாகவும், சண்டையின்போது மனைவியும் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
சந்தேக நபர்கள் பின்னர் அடையாளம் காணப்பட்ட மதிப்புமிக்க பொருட்களை எடுத்து சமையலறை ஜன்னல் வழியாக தப்புயுள்ளனர் என்று அவர் கூறினார்
இறந்தவர் வான் ஹசன் வான் எம்போங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தனது தாயின் வீடு உடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தாயும் காயமடைந்துள்ளதாகவும் ஒரு பெண் புகார் வழங்கியதைத் தொடர்ந்து காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டதாகவும் ஏ.சி.பி அனுவர் கூறினார். மேல் விசாரணை நடந்து வருகிறது.