அவ்வப்போது, வேற்று கிரக வாசிகளும், அயலான்களும் ஒரு பறக்கும் தட்டில் வந்துபோவதாக பல செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
அந்த அளவில் விண்ணைத்தாண்டி என்ன இருக்கிறது. நம்மைத் தாண்டி உயிரினங்கள் இருக்கிறதா என விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் அவ்வப்போது பூமியில் விழும் எரிகல் குறித்த செய்திகளும் இடம் படங்களுடன் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் ஒருவர் விண்கல் கிடைத்ததால் கோடீவரர் ஆனதாகத் தகவல்கள் வெளியிட்டுள்ளார்.
இச்செய்திகளில் உண்மையிருக்கிறதா? மறுக்கவும் முடியவில்லை. நமபவும் முடியவில்லை! ஆனாலும் இல்லை என்று ஒட்டுமொத்தமாக மறுத்துப்பேசவும் சான்றுகள் போதுமானதாக இல்லை.
இந்நிலையில், இதேபோல் ஜப்பான் நாட்டில் ஒரு பகுதியில் வானில் இருந்து வந்த எரிகல் பூமியில் விழும் காட்சிகள் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
எரிகல் உண்மையென்றால் ஏலியன்கள் வந்துபோவதும் உண்மையாகத்தானே இருக்க வேண்டும்!
கமெண்ட்: வேற்று கிரகத்திலும் தேர்தல்கள் நடக்கலாம். அதிபர்களைத்தேர்வு செய்யலாம். மனித கண்டுபிடிப்புகளை களவாடிச்செல்ல பூமிக்கு வருவார்களோ? அல்லது ஆயுத கடத்தல்களுக்காக இருக்குமோ?