கொரோனாவுக்கு சிங்கம் ஒரு பொருட்டல்ல!

கொரோனா தொடக்கத்தின்போது விலங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்ட செய்திகள் உண்டு. அதன்பின், விலங்குகளுக்கு வர வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்டது. இப்போது ஒரு நாட்டில் சிங்கங்களுக்குக் கொரோனா தொற்று பரவியுள்ளது.

பார்சிலோனாவில் உள்ள விலங்குகள் காட்சி நிலையத்தில் அங்கு பணி புரியும் இரண்டு ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள 4 சிங்கங்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அங்கிருந்த சிங்கங்களில் இந்த நான்கில் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவற்றிற்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த விலங்கள் காட்சி நிலையத்தில் ஏற்கெனவே புலிகளுக்கு கொரோனா வந்து சிகிச்சையால் குணமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here