புதுடெல்லி –
இந்த 40 அமைப்புகளில் இடம்பெறாத ஓர் அமைப்பு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாரதீய கிசான் யூனியன் (கிசான்) ஆகும்.
இதன் பிரதிநிதிகள், மத்திய விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள், வேளாண் சட்டங்கள் பற்றியும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடர்பாகவும் சில ஆலோசனைகளைக் கூறி உள்ளனர். அவற்றில் –
* சர்ச்சை ஏற்பட்டால் சிவில் கோர்ட்டுகளுக்கு செல்வதற்கு விவசாயிகளுக்கு வாய்ப்பு தரலாம்.
* சிறிய நகரங்களிலும், கிராமங்களிலும் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சந்தையின் தலைவருக்கு வழங்கும் அதே முக்கியத்துவத்தை உள்ளாட்சி அமைப்பின் தலைவருக்கும் தரலாம்.
* பாசனத்துக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
* விளைபொருட்களின் தரம், கொள்முதல் மையத்தில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் விற்பனை செய்வதில் பிரச்சினை வராது.
இவ்வாறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவர் பவன் தாக்கூர் நிருபர்களிடம் பேசுகையில், “வேளாண் சட்டங்கள் பற்றி மந்திரி விரிவாக விளக்கினார். அந்த சட்டங்கள் உண்மையிலேயே நல்ல சட்டங்கள் என உணர்ந்தோம்.
இதைத் தொடர்ந்து மத்திய விவசாய அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் ,
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாரதீய கிசான் யூனியன் (கிசான்) அமைப்பினருக்கு மந்திரி தோமர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்தச் சட்டங்களுக்கு ஆதரவு இருக்கிறது.
மேலும், உண்மையான விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் அரசு பேச்சு வார்த்தையைத் தொடர்வதற்குத் தயாராக உள்ளது. திறந்த மனதுடன் தீர்வு காண்பதற்கும் தயாராக இருக்கிறது என மந்திரி தோமர் தெரிவித்தாகக் கூறப்பட்டுள்ளது.