பிரபல தமிழ் நடிகர் மாரடைப்பால் மரணம்!

பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் காலமானார்.

மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமான டப்பிங் கலைஞரான அருண் அலெக்சாண்டர் முதல் படத்திலேயே தனது நடிப்பினால் அனைவரையும் மிரள வைத்தார். ஒரு தேர்ந்த நடிகர் போல் முதல் படத்திலேயே முத்திரைப் பதித்தார்.

அதனைத் தொடர்ந்து கோலமாவு கோகிலா, கைதி ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், விரைவில் வெளியாக உள்ள மாஸ்டர் படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்த ஆண்டு பல திரைநட்சத்திரங்களின் உயிரைப் பறித்துள்ளது.

இர்ஃபான்கான், சுஷாந்த் சிங், எஸ்.பி.பி, சித்ரா, வடிவேல் பாலாஜி உள்ளிட்ட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 48 வயதே ஆன நடிகரும், டப்பிங் கலைஞருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here