கோலாலம்பூர்: சிலாங்கூரில் உள்ள கோல சிலாங்கூர், கிள்ளான் மற்றும் கோல லங்காட் மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை, பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வியாழக்கிழமை (ஜனவரி 14) வெளியிடப்பட்ட அறிக்கையில், மெட் மலேசியா இதேபோன்ற வானிலை நிலைமை சரவாக்கிலுள்ள மிரி (மருடி) மற்றும் லிம்பாங்கிலும் கணிக்கப்பட்டுள்ளது என்றார்.
சபிடாங், டெனோம், கோலா பென்யு மற்றும் பியூஃபோர்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய சபாவின் உட்புறங்களில், இதேபோன்ற வானிலை நிலையும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் லாபுவானில், இன்று காலை 9 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. – பெர்னாமா