தொழிலாளர்கள் மறுசீரமைப்புத் திட்டம் – முகவர்கள் நியமிக்கப்படவில்லை

பெட்டாலிங் ஜெயா: தொழிலாளர் மற்றும் திருப்பி அனுப்புதல் மறுசீரமைப்பு திட்டத்தை நிர்வகிக்க குடிநுழைவு துறையால் எந்த முகவர்களும் நியமிக்கப்படவில்லை என்று குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ கைருல் டைமி டாவூட் தெரிவித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட விலைக்கு திட்டத்தை பதிவு செய்வதில் மூன்றாம் தரப்பினரின் சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகள் குறித்து துறைக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.

மறுசீரமைப்பு திட்டத்தை நிர்வகிக்க எந்தவொரு  நபரையும் நாங்கள் ஒருபோதும் தேர்ந்தெடுக்கவில்லை. அதன் பதிவுக்காக முகவர்கள் அல்லது பிற மூன்றாம் தரப்பினருடன் எந்தவிதமான பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பதிவு www.imi.gov.my இல் நேரடியாக செய்ய முடியும் என்று அவர் வியாழக்கிழமை (ஜனவரி 14) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here