கடந்த 16ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சியை சேர்ந்த பிரசாத் என்பவரின் காளை பங்கேற்றது. அவருடன் பிரசாந்தின் நண்பரின் தம்பி நவமணி (24) என்பவரும் சென்றிருந்தார்.
இந்நிலையில் பிரசாந்தின் காளை வாடிவாசலில் இருந்து வெளியேவிடப்பட்டது. அப்போது நவமணி அந்த காளையை கயிறி வீசி பிடிக்க முயன்றார். அப்போது அந்த காளை நவமணியை முட்டியது.
படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே போல் புதுக்கோட்டை அருகே வடவாளம் ஊராட்சி சேவுகம்பட்டி காளி கோயிலில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
அப்போது, காளை முட்டியதில், அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கீழக்காயாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன்(22) படுகாயமடைந்தார். அதன் பின்னர் அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் இலுப்பூர் பிடாரி அம்மன் கோயிலில் 14 ஆம் தேதி அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அப்போது, காளை முட்டியதில் சங்கிராம்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி(42) காயமடைந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
newstm.in