தமிழகத்தில் கடந்த 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சேலத்தைச் சேர்ந்த யோகேஷ்வரன் என்ற இளைஞர் ரயிலில் ஏறி போராட்டம் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்கம்பியைத் தொட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு மறைந்த யோகேஸ்வரன் நினைவாக தங்கக் காசு பரிசாக வழங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.