சென்னை:
தமிழகத்துக்கு ஏற்கனவே 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகளும், 20 ஆயிரம் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துகளும் என மொத்தம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. இன்று (நேற்று) கூடுதலாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகள் மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளது.
இதுவரை தமிழகத்துக்கு10 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பு மருந்துகள் மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளன. ஒருவருக்கு 2 ‘டோஸ்’ என கணக்கிட்டால் 5 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட முடியும்.
தமிழகத்தில் 6 லட்சம் முன்கள பணியாளர்களை கண்டறிந்துள்ளோம். அவர்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுகக்கு நேற்று முன்தினம் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் தன்னம்பிக்கை அளிப்பதற்காக, ஓர் அமைச்சராக இல்லாமல், டாக்டராக நாளை (வெள்ளிக்கிழமை) நான் தடுப்பூசி போட்டு கொள்ளப்போவதாக் அமைச்சர் தெரிவித்தார்.