புதுடெல்லி:
குடியரசு தின முகாமில் கலந்து கொள்வோருக்கு, அவர்கள் செவித்திறன், பேச்சுத்திறன் இல்லாதவர்களாக இருந்தால் மட்டுமல்லாமல், பேசவும், கேட்கவும் திறன் படைத்தவர்களுக்கும்கூட, கொரோனா வைரஸ் தொற்று பரவலால் முகக் கவசங்கள் அணிந்துள்ளதால் தகவல் பரிமாற்றத்தில் ஒரு இணைப்புப் பாலமாக இந்த சைகை மொழி பயன்படுகிறது.
டெல்லியை சேர்ந்த ஐ.எஸ்.எல்.ஆர்.டீ.சி. எனப்படுகிற இந்திய சைகைமொழி ஆராய்ச்சி , பயிற்சி மையத்தைச் சேர்ந்த 12 இளைஞர்களைக் கொண்ட குழு, நீல நிற சீருடையில் தோன்றி அனைவருடனும் சைகைமொழியில் தொடர்பு கொள்வதைப் பார்க்க முடியும்.
இதுபற்றி அந்த மையத்தைச் சேர்ந்த சவிதா சர்மா கூறுகையில், இந்த ஆண்டு சமூக நீதி, அதிகாரம் வழங்கல் துறை அமைச்சகத்தின் அலங்கார ஊர்தியில் எங்கள் நிறுவனமும் பங்களிப்பு செய்கிறது. இதில் பங்கேற்கிறவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
இந்திய சைகைமொழி ஆராய்ச்சி, பயிற்சி மைய ஊர்தியை அலங்கரிக்கும் இறுதிக்கட்ட பணியில் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.