தமிழ் சினிமாவில் 1959 ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் வீரபாண்டிய கட்ட பொம்மன். பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜாக்சன் துரையாக நடித்திருந்தவர் பழம் பெரும் நடிகர் சிஆர் பார்த்திபன். நேற்று பழம் பெரும் நடிகர் சிஆர் பார்த்திபன் காலமானார். அவருக்கு வயது 90. வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை பேசும் படமாக இந்த படம் அமைந்திருந்தது . இந்தப் படத்தில் இடம்பெற்ற எதற்கு கட்ட வேண்டும் கிஸ்தி என்ற டயலாக் மிகவும் பிரபலமானது.