சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், ஜெயம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
தற்போது ரவி மோகன், கராத்தே பாபு, பென்ஸ், ப்ரோ கோட் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது நீண்டநாள் கனவை நனவாக்கும் வகையில் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
யோகி பாபுவை வைத்து இயக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’
தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்ற திரைப்படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா பயணம் மற்றும் இயக்குநராக அறிமுகமாகும் அனுபவம் குறித்து ரவி மோகன் மனம் திறந்து பேசியுள்ளார்.
























