-சுமுகமாக நடக்கிறது – சீனா அறிவிப்பு
அதன் பயனாக கிழக்கு லடாக்கில் பாங்கோங் ஏரியின் வடக்கு , தென்கரைகளில் இருந்து இரு தரப்பு படைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வது என சமீத்தில் இந்திய, சீன ராணுவம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை நாடாளுமன்றத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு படைகளை விலக்கிக்கொள்ளும் நடவ டிக்கையை இரு தரப்பும் தொடங்கி நடந்து வருகிறது. சீன துருப்புகள் விலக்கிக்கொள்ளப்படுவதையும், அவர்கள் தாங்கள் அமைத்திருந்த பதுங்குகுழிகளை அழிப்பதையும் காட்டும் வீடியோவை இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டது.
இதேபோன்று இருதரப்பு படைகளும் விலக்கிக்கொள்ளப்படும் நடவடிக்கை தொடங்கி விட்டதாக சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் ஏற்கனவே கூறி இருந்தார்.
இந்த நிலையில் சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹூவா சன்யிங், பீஜிங்கில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “கிழக்கு லடாக்கில் படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கை எப்படி செல்கிறது?” என கேள்வி எழுப்பப்பட்டது.
இரு தரப்பும் படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கை, மொத்தத்தில் சுமுகமாக நடக்கிறது. படைகள் வாபஸ் என்ற குறிக்கோளை அடைவதற்கு இரு தரப்பும் ஒருங்கிணைந்த முறையில் பணியாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இரு தரப்பிலும் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில், இரு தரப்பும் முன்வரிசை துருப்புகள் ஒத்திசைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் திரும்பப்பெறுவது தொடங்கி நடந்து வருகிறது. இருதரப்பும் ஒட்டுமொத்த படை விலக்க நடவடிக்கையை கருத்தொற்றுமை மற்றும் ஒப்பந்தத்தின்படி தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இதற்கு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்கிறீர்கள். அது பற்றி எனக்கு தெரியாது. நீங்கள் ராணுவத்தைத்தான் கேட்க வேண்டும்.