– கட்டணக் குறைப்பில் மக்கள் மகிழ்ச்சி
அதன்படி அதிகபட்சமாக 20 ரூபாய் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இது மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் , விமானப் பயணம் மேற்கொள்வோருக்கு உதவியாக அமைந்துள்ளது.
இது தவிர சாமானிய மக்களும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் 86,102 பேர் பயணம் செய்துள்ளனர்.
கடந்த 14- ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு சேவை தொடங்கியதை தொடர்ந்து மறுநாள் 15- ஆம் தேதி 80 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். அதன் பிறகு நேற்றுதான் அதிகம் பேர் பயணம் செய்துள்ளனர். வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் இடையே மட்டும் 11,519 பேர் நேற்று பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் 39 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக ‘நாப்கின்’ வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.
இதற்கான எந்திரம் நிறுவப்பட்டு அதில் டோக்கன் முலம் பெண்கள் கட்டணம் இல்லாமல் நாப்கின் பெறும் வசதியை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைக்கிறார்.