தைதை எனவே தாண்டவம் எதற்கோ?

 

தைமுதல் நாளே தமிழர் நாளாம்,

தைத்திட உரைத்தார் தகுமென்  றுணர்ந்தார்!

இத்திரு நாளை  ஏற்பது  தவறா!

இத்தகை மறுப்பு  இன்னும் எதற்கு?

 

சித்திரை ஒருபுறம் சிறப்புடன்  இருக்க,

சத்தியம் இதுவல   தமிழ்த்திரு நாளாம்!

சித்திரை என்பது இந்துத் திருநாள்,

சித்திரம் கெட்டால் குட்டிச் சுவர்தான்!

 

சித்தம்   தெளிவாய்  சித்திரை  வரட்டும்!

சித்திரை வேண்டாம் என்றெவர் சொன்னார்?

சத்திய   மாக  தப்படி    எதற்கு,

தைத்திரு  நாளே தமிழ்ர்க்  காகும்!

 

தைமுதல்  நாளை தடுப்பதில்  பெரும்:வித்

தைகள் காட்டின் விளம்பரம்  தான்;அத்

தைத்திரு நாளை  அறியா திருந்தால்,

சித்திரை அழைத்து சிற்றுரை கேட்பீர்!

 

தமிழர் யாரென முதலில் அறிக,

தமிழர் யாரென அறியா திருந்தால்:

தமிழ ரிடமே  தமிழறி வீரே!

தமிழனுக்  கென்றே   தைமுதல் நாளாம்!

 

-வீ.கா. அருண்மொழிதேவன்

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here