சிங்கப்பூரில் 23 பேருக்கு கொரோனா;

-சமூக அளவில் இருவர் பாதிப்பு

சிங்கப்பூர்-
சிங்கப்பூரில் மேலும் 23 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கான மொத்த எண்ணிக்கை 59,979ஆக அதிகரித்துள்ளது.

சமூக அளவில் இருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எஞ்சிய 21 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

அவர்கள் சிங்கப்பூர் வந்தடைந்ததும் அவர்களுக்கு வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கு விடுதிகளில் புதிதாகப் பாதிப்பு இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here