புத்ராஜெயா: வயது முதிர்ந்தோர் மற்றும் நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினர்களை கவனித்துக்கொள்ளும் பெண்களுக்கு வீட்டிலிருந்தே முழு ஊதியத்துடன், பணிகளை விரிவுபடுத்துவது குறித்து மனிதவள அமைச்சகம் மற்றும் பொது சேவைத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
டான் ஸ்ரீ முஹிடின் யாசின் வீட்டிலிருந்தே ஆண்களுக்கும் வேலை வழங்கப்பட வேண்டும். இதனால் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பராமரிக்க மனைவிக்கு உதவவும் ஆதரவளிக்கவும் முடியும்.
வீட்டிலிருந்தே பணியை தொடர ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்று அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த முயற்சிகள் பகிரப்பட்ட பொறுப்பை ஊக்குவிப்பதும், பெண்கள் தொழிலாளர் தொகுப்பில் இருக்க அனுமதிப்பதும் மற்றும் வேலை உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுவதும் ஆகும்.
அதே நேரத்தில், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் உட்பட ஒரு பாதுகாப்பான பணிச்சூழல் உருவாக்கப்பட வேண்டும். இதனால் பெண்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்கள் தொடர்ந்து பங்கெடுக்க முடியும் என்று பிரதமர் தனது உரையில் 2021 மகளிர் தினத்துடன் இணைந்து கூறினார்.
திட்டங்களை திட்டமிடுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் உறுதிப்படுத்துவது பணியிடங்களுக்கு முக்கியமானது என்றும் முஹிடின் சுட்டிக்காட்டினார்.
கோவிட் -19 க்குப் பிந்தைய மீட்புத் திட்டங்களை வகுப்பதில் ப்ரிஹாடின், பெஞ்சனா, பெர்மாய் மற்றும் பட்ஜெட் 2021 உள்ளிட்ட பொருளாதார ஊக்க முயற்சிகளிலிருந்து பெண்கள் நேரடியாக பயனடைவார்கள் என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது என்றார்.