பள்ளிகளில் தீவிர எஸ் ஓ பி விதிமுறைகள் கண்காணிப்பு

 

பெந்தோங்- 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி முதல் நாட்டில் ஏற்பட்ட கோவிட் -19 தொற்றுக் கிருமி அச்சுறுத்தலால் அனைத்து பள்ளிகளும் முற்றாக அடைக்கப்பட்டு தற்பொழுது மீண்டும் கல்வி அமைச்சு உத்தரவில் இவ்வாண்டில் முதல் கட்டமாக கடந்த மார்ச் 3ஆம் தேதி பாலர்பள்ளி, முதலாம் இரண்டாம், மூன்றாம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு பள்ளிக்குத் திரும்பினர்.

அதேவேளையில் நேற்று முதல் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஆண்டு மாணவர்கள் அரசாங்கம் விதித்துள்ள அனைத்து எஸ் ஓ பி நடைமுறைக்கு ஏற்றவாறு பள்ளி நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாணவர்கள் பயிலத் தொடங்கினர்.

அவ்வகையில் காவல்துறை அனைத்து பள்ளிகளிலும் இந்த எஸ் ஓ பி விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதை உறுதி செய்ய பெந்தோங் காவல்துறை அதிகாரிகள் இங்குள்ள மலாய், தமிழ், சீனப் பள்ளிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரிண்டென்டன்ட் ஸைஹாம் முகமட் கஹார் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

பி.ராமமூர்த்தி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here