எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த சனிக்கிழமை அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடை பெற்று உள்ளது. அன்றைய தினம் பிரமிக்க வைக்கும்மம்மிக்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டன.
அருங் காட்சியகத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதிய இடத்துக்கு 18 மன்னர்கள், நான்கு ராணிகளின் ‘மம்மி’க்கள் அதிர்வு ஏற்படாத சிறப்பு வாகனங்களில் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.