நாடளாவிய நிலையில் முழு எம்சிஓ அமலா? நாளை தெரியும்

கோத்தா பாரு: நாடளாவிய நிலையில் அரசாங்கம் முழு இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி) செயல்படுத்துமா என்பது குறித்த முடிவு நாளை விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்ராஜெயாவில் நடைபெறும் கோவிட் -19 தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எம்.கே.என்) கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ  தக்கியுதீன் ஹாசன் தெரிவித்தார்.

பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மந்திரி பெசார் மற்றும் முதலமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவர் கூறினார்.

இறப்பு எண்ணிக்கை 2,000 க்கும் அதிகமாக உள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். சுகாதார அமைச்சகம் மற்றும் ராயல் மலேசிய காவல்துறை (பி.டி.ஆர்.எம்) ஆகியவற்றின் வலுவான ஒத்துழைப்பை நாங்கள் அறிவோம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here